'சர்வைவர்' நிகழ்ச்சியின் சாம்பியன்: ரூ.1 கோடி பரிசு பெற்ற தமிழ் நடிகை!

கடந்த சில மாதங்களாக ஜீ டிவியில் ’சர்வைவர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்று ரூபாய் ஒரு கோடி பரிசை தமிழ் நடிகை ஒருவர் பெற்றுள்ளார்.

ஆக்சன் கிங் அர்ஜுன் நடத்தி வந்த ’சர்வைவர்’ நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது

இறுதி போட்டிக்கு நேரடியாக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார் என்பதும், இதனை அடுத்து வேனசா மற்றும் சரண் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் போட்டியாளரை தேர்வு செய்ய வாக்கு போடுவார்கள் வரவழைக்கப்பட்டனர். வாக்களிக்கும் ஜூரிகளாக நந்தா, அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன், விக்ராந்த், இனிகோ பிரபாகர், உமாபதி ஆகியோர் அளித்த வாக்குகளின் அடிப்படையில் விஜயலட்சுமி 4 ஓட்டுகளையும், சரண் 3 ஓட்டுகளையும் பெற்றனர். மற்றொரு இறுதி போட்டி வேட்பாளரான வேனசாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ’சர்வைவர்’ சாம்பியன் பட்டம் விஜயலட்சுமிக்கு என அர்ஜூன் அறிவித்து அவருக்கு பரிசுத்தொகை ரூபாய் ஒரு கோடியை அளித்தார். சாம்பியன் பட்டம் வென்ற விஜயலட்சுமிக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



நடிகை விஜயலட்சுமியின் சகோதரி கனி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் தற்போது விஜயலட்சுமி ’சர்வைவர்’ நிகழ்ச்சியின் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட வடிவேலுவின் அடுத்த படம்: வைரல் புகைப்படங்கள்!

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது

சகோதர பாசத்துடன் ரஜினியை வாழ்த்திய சசிகலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

2021ஆம் ஆண்டில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதலிடம்: அடுத்தடுத்த இடங்களில் யார் யார்?

2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

குறும்படத்திற்கு பின் அபினய்-பாவனியை வறுத்தெடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபினய் விவகாரம் கடந்த சில நாட்களாகவே வீட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்து நேற்று கமல்ஹாசன் விசாரணை செய்தார் என்பதும் தெரிந்ததே.

'புஷ்பா' படத்தின் சமந்தா பாடலுக்கு திடீர் எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்கு! 

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி