close
Choose your channels

தனுஷும் இல்லை, சூர்யாவும் இல்லை.. என் கணவர் தான் முதலில் சிக்ஸ்பேக் வைத்தார்.. தமிழ் நடிகை..!

Monday, April 28, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், நடிகர் சிவகுமார் பேசிய போது, ‘‘தமிழ் சினிமாவில் முதல் முறையாக சிக்ஸ்பேக் வைத்தது எனது மகன் சூர்யா தான்’’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஷால் அளித்த பேட்டியில், ‘‘முதல் முறையாக எனக்கு தெரிந்த அளவுக்கு சிக்ஸ் பேக் வைத்தவர் தனுஷ் தான். ’பொல்லாதவன்’ படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் வைத்தார். அதன் பிறகு தான் நான் சிக்ஸ் பேக் வைத்தேன்’’ என்று கூறினார். இதன் மூலம், சூர்யா முதலில் சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக பலரும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழ் நடிகை உமா ரியாஸ்கான் ‘‘சூர்யாவும் இல்லை, தனுஷும் இல்லை, எனது கணவர் தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர்’’ என்பதை மறைமுகமாக கூறும் நோக்கில், சமூக வலைதளத்தில் ரியாஸ் கான் சிக்ஸ் பேக் வைத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’வின்னர்’ திரைப்படத்தில், ரியாஸ் கான் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் நடித்திருந்தார். முதலில் தனது கணவர் தான் சிக்ஸ் பேக் வைத்த தமிழ் நடிகர் என்பதைக் குறிப்பதாக நெட்டிசன்கள் இந்த பதிவு குறித்து கூறி வருகின்றனர்.

ஒருவேளை இதற்கு முன் வேறு யாராவது சிக்ஸ் பேக் வைத்திருந்தால் அதைப்பற்றி தகவல்கள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment