காதலர் தினத்தில் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் தூக்கி போட்ட தமிழ் நடிகை: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலர்களும், காதலர்களாக இருந்தவர்களும் இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர் தினத்தில் பல்வேறு வழக்கமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் ஒன்று ஆஸ்திரியா நாட்டில் உள்ள சால்ஸ்பார்க் என்ற நகரில் உள்ள Salzach ஆற்றில் காதலர்கள் ஆற்றுப்பாலத்தில் பூட்டு போட்டு அந்த சாவியை தூக்கி ஆற்றில் எறியும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவ்வாறு செய்தால் தங்களுடைய காதல் என்றென்றும் நீடிக்கும் என்பது காதலர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவரான பிரணிதா கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து வரும் நிலையில் இன்றைய காதலர் தினத்தில் அவர் ஆஸ்திரியாவில் உள்ள Salzach ஆற்றில் பூட்டு போட்டு அந்த சாவியை ஆற்றில் தூக்கி எறிந்தார். இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.