close
Choose your channels

நான் அப்படி சொல்லவே இல்லை, வதந்தியை நிறுத்துங்கள்: பிரபல தமிழ் நடிகையின் டுவிட்!

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தென்னிந்திய படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில் தான் அப்படி சொல்லவே இல்லை என அந்த நடிகை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

நயன்தாரா நடித்த ’இமைக்காநொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதன் பின்னர் அவர் ’அடங்கமறு’ ’அயோக்யா’, ’சங்கத்தமிழன்’ ’அரண்மனை 3’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது அவர் ’திருச்சிற்றம்பலம்’ ’சர்தார்’, ‘மேதாவி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் ராஷிகண்ணா தென்னிந்திய படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசியதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது குறித்து தனது டுவிட்டரில் விளக்கமளித்துள்ள ராஷிகண்ணா, ‘தென்னிந்திய சினிமா குறித்து நான் தவறாக பேசியதாக சில ஜோடிக்கப்பட்ட தகவல்கள் பரவி வருகிறது. தயவுசெய்து இதை யார் செய்தாலும் உடனே நிறுத்துங்கள். நான் அனைத்து மொழி படங்களையும் மதிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.