close
Choose your channels

திருமண உறவில் இருந்து விலகுகிறேன்.. கணவரை டேக் செய்து திடீர் அறிவிப்பு வெளியிட்ட நடிகை..!

Saturday, December 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமண உறவில் இருந்து விலகுகிறேன் என தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் ஷீலா ராஜ்குமார். தனது சமூக வலைதளத்தில் திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன், நன்றி வணக்கம் என்று கூறிய தனது கணவரின் சமூக வலைதள பக்கத்தின் ஐடியை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’ஆறாவது சினம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான ஷீலா, ராஜ்குமார், ‘திரெளபதி’ படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில் வெளியான ’மண்டேலா’ உள்பட ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஷீலா ராஜ்குமார், தம்பி சோழன் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் திடீரென திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷீலா தனது கணவரை விட்டு எதற்காக பிரிகின்றார் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.