close
Choose your channels

சிவசங்கர் பாபாவை செருப்பால் அடிக்க அனுமதியுங்கள்: காவல்துறைக்கு தமிழ் நடிகை வேண்டுகோள்

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாமியார் சிவசங்கர் பாபாவை செருப்பாலும் துடைப்பத்தாலும் அடிக்க அனுமதியுங்கள் என தமிழ் நடிகை ஒருவர் காவல் துறைக்கு கோரிக்கை எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஆரத்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமான சமூக கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கும் சிவசங்கர் பாபா குறித்த செய்தியை அறிந்தவுடன் அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அந்த எச்ச சாமியார இரண்டு நாள் பொது இடத்தில் நிக்க வையுங்கள். அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த குழந்தைகள் ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் 9am- 5pm வரை செருப்பால துடப்பத்தால் அடிக்கிறோம்.. பிறகு உங்கள் சட்டம் தன் கடமையை செய்யட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் ஆர்த்தியின் மற்றொரு டுவிட்டில் கூறியிருப்பதாவது: ‘பாடகியின் மகளை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய பாதிரியாரை மீடியாக்கள் காட்ட மறுப்பதேன்?? பாலியல் தொல்லை கொடுப்பவர்களை பிரித்துப் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுத்து விளம்பரப் படுத்துங்கள் இனிமே பார்ப்பவர்கள் காரித்துபனும்’

நடிகை ஆரத்தியின் இந்த இரண்டு டுவிட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.