close
Choose your channels

'தலப்பொங்கல்' கொண்டாடவிருந்த தமிழ் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகை ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் நேற்று அவர் ’தலப்பொங்கல்’ கொண்டாட இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா ராமன். அதன்பின் இவர் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் சஞ்சய் - வித்யுலேகா ராமன் தம்பதிக்கு நேற்று ’தலப்பொங்கல்’ என்ற நிலையில் நேற்று திடீரென தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தான் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தனது கணவர் சஞ்சய்க்கு நெகட்டிவ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொரொனா நேரத்தில் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.