சிவசங்கர் பாபா பள்ளியின் அங்கீகாரம் ரத்தா? தமிழக அரசுக்கு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை!

சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா நடத்திவரும் சுசில்ஹரி சர்வதேச பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து தலைமறைவான சிவசங்கர் பாபாவை சற்று முன்னர் டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் அதன்பின் அவரிடம் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசுக்கு குழந்தைகள் ஆணையம் கோரிக்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இந்தியாவில் பச்சை பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர்.....! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி....!

நாட்டிலே முதன் முதலாக பச்சை பூஞ்சை தொற்று மும்பையில் உள்ள ஒரு நபருக்கு பாதித்துள்ளதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 490 மார்க் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக 'குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய

பிகினி உடையில் இருக்கும் ஜான்வி கபூர் கையை பிடித்துள்ள இளைஞர் யார்?

மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் பாலிவுட் திரை உலகில் 'தடக்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு ஒருசில திரைப்படங்களில் அவர்

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு ப்ரியா பவானிசங்கரின் ஷாக்கிங் பதில்!

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அதிரடியான பதிலை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இயக்குனர் ஷங்கர் மீது மீண்டும் ஒரு வழக்கு: லைகா எடுத்த அதிரடி முடிவு!

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் 'இந்தியன் 2' என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தில் திடிரென ஏற்பட்ட விபத்து