தடுப்பூசி செலுத்தி கொண்ட தமிழ் இயக்குநர்… முதல்வருக்கு அறிக்கை வெளியிட்டு பாராட்டு!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதற்கு பிறகு தடுப்பூசி பணியை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இயக்குநர் அமீர் சென்னை ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து, “மிகவும் சுகாதாரமாகவும் சிறந்த உபசரிப்புடனும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பணியைச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதோடு தடுப்பூசி குறித்த தவறான சில கருத்துகளும் நம்மிடையே உலவுகின்றன. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோயிலிருந்து முழுமையாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

More News

கேப்டன் வில்லியம்சனுக்கு காயம்? உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருப்பாரா?

ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டு உள்ளதாகப் பரபரப்பு  தகவல் வெளியாகி இருக்கிறது.

சிம்புவின் 'மாநாடு' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்தில் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்த

'தி பேமிலிமேன் 2' தொடரில் நடிக்க சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடித்த வெப்தொடர் 'தி பேமிலிமேன் 2' சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடர் பெரும்பாலான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தாலும்

ஷங்கரின் அடுத்த படத்தில் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்?

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் திடீரென அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படத்தை நிறுத்திவிட்டு

திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா? கடத்தல்காரர்கள் கைது!

ரூபாய் 8 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது