ரஜினியை அடுத்து 'லவ் டுடே' இயக்குனருக்கு வாழ்த்து கூறிய மாஸ் நடிகர்!

சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை செய்துவரும் நிலையில் இந்த படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஒருவர் ’லவ் டுடே’ இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ‘லவ் டுடே’ என்ற படத்தை தானே நடித்து இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் தற்போது வரை இந்த படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் இதனால் இந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லவ் டுடே இயக்குனருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரதீப் ரங்கநாதனை தனது வீட்டிற்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து தற்போது நடிகர் சிம்பு பிரதீப் ரங்கநாதனுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘லவ் டுடே’ படத்தின் அமோக வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார். இது குறித்த வீடியோவை பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’சிம்புவுக்கு நன்றி தெரிவித்ததோடு உங்களது முதல் போன்கால் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது, உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

More News

மதுரை வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. காரை நிறுத்தி பார்த்து ரசித்த பிரபல நடிகர்!

மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பிரபல நடிகர் ஒருவர் காரை நிறுத்தி பார்த்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'ஆர்.ஆர்.ஆர் 2': எஸ்.எஸ்.ராஜமெளலி கூறிய சூப்பர் தகவல்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர்

ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா? கதையை கேட்டு கண்கலங்கிய ரக்சிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள திருநங்கை ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா என அவருடைய காதல் கதையை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுபோன்ற முட்டாள்கள் இன்னும் வளர வேண்டும்: ரக்சிதா கணவரின் இந்த போஸ்ட் யாருக்காக?

இவர்கள் போன்ற முட்டாள் ஆண்கள் இன்னும் வளரவேண்டும் என ரக்சிதாவின் கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பொன்னியின் செல்வன் 2': மணிரத்னம் செய்த திடீர் மாற்றம்!

 மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.