'வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன் SPR ! 

  • IndiaGlitz, [Wednesday,February 09 2022]

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு இளம் ஹீரோ கிடைத்துள்ளார். அவர்தான் நடிகர் அகிலன் SPR

’வீரமே வாகை சூடும்” படத்தில் விஷாலின் தங்கையின் காதலர் கேரக்டரில் நடித்திருக்கும் இவருடைய நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோ கிடைத்து விட்டதாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தற்போது ’பீட்சா 3’ படத்தில் முக்கிய பாத்திரத்திலும், ஒரு வெப்சீரிஸில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதேபோல் ஒரு மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இயக்குநர் பானுசங்கர் இயக்கும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஒரு இளம் நடிகர் நாயகனாக பிரமாண்டமான தெலுங்கு படத்தில் அறிமுகமாவது இதுவே முதல் முறை.

தமிழிலும் இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது சில தமிழ் படங்களில் நாயகானாக ஒப்பந்தமாகியுள்ளார் அகிலன் SPR. அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

More News

'வெந்து தணிந்தது காடு' மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு!

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்றொரு பிரபல நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும்

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு காதல் ஜோடி: காதலர் தினத்தில் அறிவிப்பா?

தமிழ் சினிமாவில் சூர்யா - ஜோதிகா, ஆர்யா- சாயிஷா, பிரசன்னா - சினேகா உட்பட பல நட்சத்திர தம்பதிகளின் காதல் வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நட்சத்திர காதல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

மலைப்பாம்பை தோளில் மாட்டி கொண்ட யாஷிகா ஆனந்த்: வைரல் வீடியோ

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இருக்கும் நிலையில் மலைப்பாம்பை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் வீடியோவை யாஷிகா வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'பொன்னியின் செல்வன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்!

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் அதே டைட்டிலில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.