close
Choose your channels

லண்டன் சென்று கிரிக்கெட் மேட்ச் பார்த்த தமிழ் இயக்குனர்.. கும்ப்ளேவுடன் சந்திப்பு..!

Friday, June 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் நேரில் பார்த்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியை பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன், லண்டன் ஓவல் மைதானத்தில் நேரில் பார்த்து வருகிறார். மேலும் அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவையும் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பம்பாய்’ ’குரு’ ’கடல்’ உள்பட ஒரு சில படங்களில் ஒளிப்பதிவு செய்த ராஜீவ் மேனன் ’மின்சார கனவு’ ’கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ ’சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.