காரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

உலகின் வயதான ஹீரோ என்ற புகழ்பெற்ற நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த ‘தாதா 87’ என்ற திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மது கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்கத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மது கடத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுவதால் போலீசார் இதுகுறித்து மாவட்ட, மாநில எல்லைகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி போலீசார் நேற்று ரோந்து சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது சந்தேகத்துக்குரிய ஒரு வாகனம் வருவதை கண்டுபிடித்தனர். அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 248 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அந்த வாகனத்தில் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக ’போலீஸ்’ என்ற போர்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அந்த வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்த போது அதில் ஒருவர் ’தாதா 87; படத்தை தயாரித்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது கார் மற்றும், காரில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

தமிழகம் முழுவதும் மூடப்படுகிறது டாஸ்மாக்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 5வது நாளாக 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

சாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்

சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலர்

அரை நிர்வாண உடலில் பெயிண்டிங்: சபரிமலை பெண் போராளி மீது நடவடிக்கை எடுத்த பி.எஸ்.என்.எல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ரெஹானா பாத்திமா என்பவர் சமீபத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே

சொந்த கட்சியினரே வைத்த சூன்யம்: நேபாள பிரதமர் பதவிக்கு ஆபத்து!!!

நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி. இவரை பதவியில் இருந்து விலகுமாறு சொந்தக் கட்சியினரே வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.