close
Choose your channels

பாக்யராஜ் செய்த ராஜினாமாவில் திடீர் திருப்பம்...!

Friday, November 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ், 'சர்கார்' கதை விவகாரம் குறித்த பிரச்சனையால் அதிருப்தி அடைந்து சற்றுமுன்னர் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா குறித்து அவர் விளக்கமளித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பாக்யராஜின் ராஜினாமாவை எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றும் அவரே தலைவராக தொடர வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வந்தன.

இதனையடுத்து திடீர் திருப்பமாக எழுத்தாளர் சங்கத்தலைவராக கே.பாக்யராஜ் அவர்களே தொடர்வார் என்று எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளை பாக்யராஜ் ஏற்று, ராஜினாமாவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.