நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஒருவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரை இசை பாடல்களில் கானா பாடல்களுக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு என்பதும் அந்த வகையில் சுமார் 300 கானா பாடல்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பாடியவர் கானா பாலா என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட கானா பாலா மனு தாக்கல் செய்துள்ளார். திருவிக நகர் 65வது மண்டலம் 72 வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
அந்த தொகுதியில் 4000 வாக்குகளுக்கும் மேல் கடந்த தேர்தல்களில் இவர் பெற்றுள்ளார் என்பதால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றும் அந்த பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் கானா பாலா கூறியுள்ளார். கானா பாலா இந்த முறை வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments