விளையாட்டை விட எந்த ஒரு தனி மனிதனும் பெரியவர் அல்ல: தோனியை விமர்சித்தாரா தமிழ் ஹீரோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விளையாட்டை விட எந்த ஒரு தனி மனிதரும் பெரியவர் அல்ல எனத் தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர், தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருக்கிறார். இது தோனியை மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கருதப்படுகிறது.
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி மிக மோசமாக விளையாடியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட பொறுப்புடன் விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் சிஎஸ்கே ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்றைய போட்டியின் படுதோல்வியை தமிழ் ஹீரோ விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
"நானும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், இதைப் பற்றி பேசக்கூடாது... பேசக்கூடாது... பேசக்கூடாது என்று இருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இது ஒரு கொடுமையான விஷயம். ஏன் இவ்வளவு லோ ஆர்டரில் ஆட வேண்டும்? எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அதில் தோல்வியை தவிர்க்கத்தான் முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி இல்லை. ஏதோ சர்க்கஸ் பார்க்கச் சென்றது போல இருக்கிறது. விளையாட்டை விட எந்த ஒரு தனி மனிதரும் பெரியவர் அல்ல," என்று பதிவு செய்துள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
I refrained n refrained n refrained being a cricketer myself...
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 11, 2025
I didn wanna come to conclusions too soon...
But this is atrocious...
Why come so lower down the order ..
Is any sport played not to win?
Its just like visitn a circus now...
NO INDIVIDUAL IS BIGGER THAN THE…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com