'வீரன்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,May 29 2023]

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’வீரன்’ என்ற திரைப்படம் வரும் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், ஆதிரா ராஜ் , முனிஷ்காந்த், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’வீரன்’. இந்த படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வீரன்’ திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் சமீபத்தில் தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தனுஷை சந்தித்து சில கதைகள் கூறியதாகவும் கண்டிப்பாக நாம் இணைந்து பணி புரிவோம் என்ற நம்பிக்கையை தனுஷ் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

’வீரன்’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மீண்டும் தனுஷை ஏஆர்கே சரவணன் சந்திக்க இருப்பதாகவும், அப்போது இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவான ’மரகத நாணயம்’ படத்தை தனுஷ் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏஆர்கே சரவணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

234 தொகுதிகள், 6000 பேர்.. சென்னையில் விஜய் நடத்தும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி..!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 6000 நபர்களை வரவழைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது.. அனுபமா பரமேஸ்வரன் அறிவிப்பால் திரையுலகில் பரபரப்பு..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஸ்டார் ஹோட்டலில் பிச்சைக்காரர்களுக்கு விருந்து வைத்த முக்கிய இயக்குநர்… நெகிழ்ச்சி வீடியோ!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி

இதுதான் கடைசி போட்டி… சிஎஸ்கே முக்கிய வீரர் ஓய்வை அறிவித்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று நடைபெறவுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு

ஷோபாவில் நிர்வாண போஸ்… பிரபல நடிகரின் புகைப்படத்தால் இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாலிவுட் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.