'எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள்': பிரபல இசையமைப்பாளரின் திருமண புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,October 05 2022]

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் திருமணம் இன்று நடைபெற்றதை அடுத்து எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிளுக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது என தமிழ் நடிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அதன் பிறகு ’ஒரு நாள் கூத்து’ ’உள்குத்து’ ’தொண்டன்’ ’தர்மபிரபு’ ’நாடோடிகள் 2’ ’ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடந்ததை அடுத்து தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ’எங்கள் கூட்டத்தின் கடை சிங்கிள்  இன்று முதல் சங்க உறுப்பினர் ஆகிறார் என்றும் வாழ்த்துக்கள் நண்பா என்றும் வாழ்க வளமுடன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' பட டீசர் ரிலீஸ்!

ஆதி புருஷ்' படத்தின் டீசர், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி, பார்வையாளர்களுக்கு மிகப்பிரம்மாண்டமான காட்சி ரீதியிலான விருந்தை அளித்திருக்கிறது

என் வீடு என்றென்றும்  திறந்து இருக்கும், 24 மணி நேரமும் அன்னதானம்: லெஜண்ட் சரவணன்

 மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுவதாகவும் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். 

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று நீண்டகாலமாக திரையிடப்படாமல் கால தாமதமாகி வந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பருந்தாகுது ஊர்க்குருவி': ஒரே நாளில் நடந்த உண்மைக்கதை!

லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில்  தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ருஸ்ஸோ மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'பருந்தாகுது ஊர்க்குருவி'

'பொன்னியின் செல்வன்' பார்த்து ரஜினி, ஷங்கர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வைரல் டுவிட்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது