பெருந்தன்மையுடன் விட்டுவிடுவோம்: அஸ்வின் சர்ச்சை குறித்து பிரபல தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய விஷயம் கடந்த இரண்டு நாட்களாக மீம்ஸ்களாக வைரலாகி வரும் நிலையில் இது குறித்து கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர் ’பெருந்தன்மையுடன் அதை கடந்து செல்வோம்’ என்று கூறியுள்ளார்

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்த ’என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது

இதில் தான் 40 கதைகளை கேட்டதாகவும் அந்த கதைகள் எல்லாம் பிடிக்கவில்லை என்பதால் தூங்கி விட்டதாகவும், தான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ’என்ன சொல்ல போகிறாய்’ தான் என்றும் அவர் கூறினார்

முதல் படம் வெளியாகும் முன்பே அஸ்வினின் சர்ச்சைக்குரிய பேச்சை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களாக போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்’ என்று கூறியுள்ளார்.

More News

நடிகர் அருண்விஜய் நடிக்கும் “யானை“ படத்தின் புது அப்டேட்!

வெற்றிப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் தற்போது “யானை“ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒரே ஒரு ஸ்லோகன்: தாமரையை கதறி அழவைத்த பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு ஸ்லோகனை சொல்லி தாமரையை கதறி அழ வைத்த பிரியங்காவின் செயல் குறித்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. 

இந்தியாவின் லெஜண்ட் கிரிக்கெட்டர்கள் திடீர் சந்திப்பு… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இருவரும் சந்தித்துக் கொண்ட

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து… முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?‘

குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இதுவரை 7

ஆரவ்-ராஹி: வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் என்பது தெரிந்ததே