close
Choose your channels

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி

Monday, August 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலக பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் அதில் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வி. சுவாமிநாதன் அவர்கள் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் கடந்த 1994-ம் ஆண்டு ’அரண்மனை காவலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். அதன் பின்னர் மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், வீரம் விளைந்த மண், பிரியமுடன், உன்னை தேடி, உள்பட பல திரைப்படங்களை தயாரித்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் ஜெயம் ரவி நடித்த ’சகலகலா வல்லவன்’ திரைப்படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.