ஆறடியில் ஒரு கேக் சிலை… மரடோனாவை கவுரவித்த தமிழர்!!!

 

மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி கடைக்காரர் ஆறடியில் கேக் சிலையை வடிவமைத்து உள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ரங்கநாதன் என்பவர் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் செலபிரேஷனுக்கு கேக் செய்வது வழக்கமாம். இந்த ஆண்டும் கேக் செய்ய முடிவெடுத்த அவர் மறைந்த கால்பந்து வீரர் மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்த விரும்பி இருக்கிறார்.

இதற்காக 60 கிலோ சர்க்கரை 270 முட்டைகளைப் பயன்படுத்தி மரடோனாவிற்கு ஆறடியில் ஒரு கேக் சிலையை உருவாக்கி விட்டார். இந்தக் கேக்கை பார்த்த பலரும் சதீஷ்க்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு இவர் இளையராஜா, அப்துல் கலாம், பாரதியார் எனப் பல பிரபலங்களுக்கும் கேக் சிலையை வடிவமைத்து பார்வையாளர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

60 வயதான டியாகோ மரடோனா கடந்த நவம்பர் 26 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அர்ஜெண்டைனா வீரரான இவர் அந்நாட்டிற்காக 4 உலகக்கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். அதில் 1986 இல் இவர் தலைமையிலான அர்ஜெண்டைனா அணி வெற்றி வெற்றது. மேலும் அந்த ஆண்டில் சிறந்த வீரராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அர்ஜெண்டைனா சார்பாக 91 கால்பந்து போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை, எந்தெந்த சேவைக்கு எவ்வளவு லஞ்சம்: பட்டியலிட்ட கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கிடைக்குற கேப்பெல்லாம் யூஸ் பண்றாரே: ஆரியை கட்டம் கட்டிய ஷிவானி, ரம்யா!

பிக்பாஸ் வீட்டில் ஆரியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் வீட்டுக்குள் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஆரி குறித்து கொஞ்சம்

தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால் அபிஷேகம்… பரவசத்தில் பக்தர்கள்!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட உள்ள ஒரு கோயில் கட்டுமானப் பணியின்போது பக்தர்கள் 11,000 லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி அபிஷேகம் செய்த காட்சி பலரையும் வியக்க வைத்து உள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை: இளையராஜா முடிவில் திடீர் மாற்றம்!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு நாள் மட்டும் தியானம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை அவர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு