முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]


விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மட்டுமே பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தது. மற்றபடி சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வழக்கம்போல் பணிக்கு சென்று வந்ததால் ஸ்டாலின் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை தீர்மானிக்கும் பொருப்பை மக்களிடமே விட்டுவிடுவோம்

இன்று காலை முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் ஒருசில கடைகள் திறந்திருந்தன. ஆனால் திமுகவினர் அந்த கடைகளையும் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரும் தூத்துக்குடி மாவட்டத்தின் திமுக பெரும்புள்ளியுமான ஒருவர் தனது மகளின் பெயரில் நடத்தி வரும் உணவு விடுதி மற்றும் ரெஸ்டாரெண்ட் மட்டும் மூடவில்லை. மற்ற கடைகளை அடைக்க வலியுறுத்திய திமுகவினர்கள் இந்த இரண்டையும் கண்டு கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முழு அடைப்பு போராட்டம் என்பது மக்களுக்கு மட்டும்தானா? அரசியல் கட்சிகளின் நிறுவனங்கள் எப்போதும் போல் கல்லா கட்டுவது நியாயம்தானா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More News

தினகரனை யார் என்றே தெரியாது! முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது குறித்த வழக்கு ஒன்றில் டிடிவி தினகரனிடம் நான்காவது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது.

டிடிவி தினகரன் கைது எப்போது? நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை. ஓபிஎஸ் முக்கிய தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியேற்று ஆட்சியை நடத்தி கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரத்தில் பிடிபட்ட சென்னை சென்ட்ரல் ரயில் வெடிகுண்டு மிரட்டல்காரர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று ஒரு மிரட்டல் கடிதம் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்ததாக சற்று முன்னர் பார்த்தோம்.

ஆபாச படங்கள் நடித்த நடிகைக்கு கிடைத்த கடவுளின் ஆசி!

சிறு வயதில் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கிறிஸ்சி அவுட்லா என்பவர் சமீப காலம் வரை ஒரு மணி நேரத்துக்கு $1000 சம்பளம் வாங்கும் ஆபாச பட நடிகையாக இருந்தார்.