close
Choose your channels

மீத்தேன், நியூட்ரினோ பேராட்ட வழக்குகள் வாபஸ்… சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பு!

Thursday, June 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றுகாலை தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசினார். அப்போது ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. அதாவது ஆளுநர் உரை டிரெய்லர்தான் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,

மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும்.

வேளாண் சட்டம் குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

வடமாட்ட தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனத்தில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும்.

தமிழகத்தில் உள்ள சமத்துபுரங்கள் சீரமைக்கப்படும். புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்க சிகிச்சைபெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டும் எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.