close
Choose your channels

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குடலிறக்கம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சற்று முன்னால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததால் திடீரென அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் குடலிறக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சைக்கான காலம் மற்றும் அதன் பிறகு மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறை குறித்து மருத்துவர் குழுவினர் தற்போது ஆலோசித்து வருகின்றனர்

சற்றுமுன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை முறைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.