close
Choose your channels

தேவை இல்லாம கேள்வி கேட்காதிங்க: நிருபரிடம் பொங்கிய முதல்வர்

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெருமை பேசுகிறீர்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதை அடுத்து பொங்கி எழுந்த முதல்வர் ஆவேசமாக பதில் கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் வாங்கி கொடுத்ததாக பெருமை பேசுகிறீர்கள் என நிருபர் ஒருவர் முதல்வரிடம் கேள்வி கேட்டபோது குறிக்கிட்ட முதல்வர் ஆவேசமாக பதிலளித்தார்

நாங்கள் பெருமை பேசவில்லை என்றும் மாறாக பெருமைப்படுகிறோம் என்றும், நான் கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் கூறினார். மேலும் நிருபரை பார்த்து நீங்கள் தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்கின்றீர்கள் என்றும் ஒரு நிருபர் சரியான கேள்வியை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

இதற்கு முன்னர் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? 7.5% என்பது எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? தேவையில்லாமல் கேள்வி கேட்காதீர்கள் என அந்த நிருபரை பேசவே விடாமல் அடுக்கடுக்காக ஆவேசமாக கேள்வி கேட்ட முதல்வரால் செய்தியாளர் சந்திப்பே பரபரப்பானது

அரசியல் ஆளுமைகள் என்று கூறப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா கூட இந்த அளவுக்கு பத்திரிகையளர்களிடம் தைரியமாக கேள்வி கேட்கவில்லை என்றும் உண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தைரியமான முதல்வர் என்றும், மக்களின் முதல்வர் என்றும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.