close
Choose your channels

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறதா...! டெல்லி முதல்வர் கடிதம்....!

Wednesday, April 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தீவிரமாகி வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் தினசரி கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருசில மாநிலங்களில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ தேர்வு சொன்னபடியே மே-4-இல் நடக்கும் எனக்கூறப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் உயிருடன் விளையாடுவது நல்லதல்ல, நேரடி தேர்வுகளை ரத்து செய்து, ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

"டெல்லியில் நடக்கவிருக்கும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 6 லட்சம் மாணவர்களும், 1 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளதால், தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது. மத்திய அரசு தேர்விற்கு பதிலாக வேறு மாற்று முறைகளை பரிசீலிக்க வேண்டும். கொரோனாவின் இரண்டாவது அலை ஆபத்தாக உள்ளதால், ஆன்லைன் முறை அல்லது உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களை இம்முறை தேர்ச்சி பெற வைக்க ஆலோசனை நடத்தலாம். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 13, 500 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுகளை ரத்து செய்யவோ, ஆன்லைனில் நடத்தவோ சிபிஎஸ்இ தயாராக இல்லை. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில்,மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் இதுபற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.