11ஆம் தேதி மருத்துவர் குழு, 17ஆம் தேதி பிரதமர்: அடுத்தடுத்து ஆலோசனை செய்யும் முதல்வர்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியின் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் சென்னையில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. நேற்று தமிழகத்தில் 1982 பேர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் கொரோனாவில் தாக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?, அடுத்த கட்டமாக எடுக்க வேண்டியது நடவடிக்கை என்ன? என்பது குறித்து மருத்துவர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவக் குழுவுடன் ஆலோசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளார்

மேலும் பிரதமர் மோடி அவர்கள் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதி தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழக முதல்வருடன் ஜூன் 17ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. காணொளியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அதிரடியாக ஒரு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது மருத்துவர் குழு மற்றும் பிரதமருடன் தமிழக முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினார்கள்: மாளவிகா மோகனன் அதிர்ச்சி தகவல்

தனக்கு மிகவும் நெருக்கமான பலர் 'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆனால் நான் அவர்களின் பேச்சைக் கேட்காமல் 'பேட்ட' படத்தில் நடித்ததாகவும் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

சூப்பர் ஹிட் படத்தின் ஸ்கிரிப்டை 7 நாட்களில் எழுதி முடித்த கமல்ஹாசன்: ஆச்சரிய தகவல் 

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் சமூக வலைத்தளம் மூலம் உரையாடினார் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே.

போலியோ தடுப்பு மருந்து: கொரோனாவைத் தடுக்க பயன்படுமா??? விஞ்ஞானிகளின் புது நம்பிக்கை!!!

“காசநோய் தடுப்பூசி (பிசிஜி) அதிகம் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது”

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கலர் கலரான ஸ்வீட் அறிமுகம்!!!

கொரோனா நோய்த்தொற்று உலகையே புரட்டி போட்ட நிலையில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இது நடந்தது உண்மை, இதற்கு இறைவனும் ஜெ.அன்பழகனுமே சாட்சி: இயக்குனர் அமீர்

சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் அமீர், மறைந்த தலைவர் ஜெ.அன்பழகன் குறித்தும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும் கூறிய ஒருசில கருத்துக்கள் ஊடகங்களில் பெரும் பரபரப்பையும்