எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… பகவத் கீதை வழியே ஓபிஎஸ் சொல்ல வருவது???

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

 

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகவத்கீதை வரிகளை கோடிட்டு இருக்கிறார். இந்த பதிவு அரசியல் மட்டத்தில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தமிழகச் சட்டசபை தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான போட்டி இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதனால் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு அதிகரித்து இருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதோடு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் கலந்து பேசி அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பை வரும் 7 ஆம் தேதி வெளியிடுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு வெளிவரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் எனக் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

மேலும் அதில் “தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே என முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! எனப் பதிவிட்டு இருக்கிறார்.

More News

பாவப் பட்டவர்களுக்கே அறிவுரை சொல்வதா? இதென்ன நியாயம்? ராகுல் காந்தி காட்டம்!!!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

50 கிராம் பொங்கல் எப்படி 220 கிராமாக மாறும்??? ரயில்வே துறையின் அறிவிப்பால் பொங்கிப்போன வாடிக்கையாளர்கள்!!!

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் கடும் வைரலாகி இருக்கிறது. திருச்சியில் இருந்து சென்னையை

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு… பரபரப்பு தகவல்!!!

2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் துவங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

19 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 38 வயது எம்.எல்.ஏ: மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி

19 வயது கல்லூரி மாணவி ஒருவரை 38 வயது எம்எல்ஏ ஒருவர் இன்று காலை திருமணம் செய்ததை அடுத்து கல்லூரி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வெறும் 50 ரூபாய்க்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன்: ஆச்சரிய தகவல்

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆயிரக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் வெறும் 50 ரூபாய்க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து தர இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது