மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள்

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருட்டு டிவிடி பிரச்சனையை இந்த புதிய டீம் நிச்சயம் ஒழித்துவிடும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகியவை இணைந்து மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து தற்போது பார்ப்போம்

மத்திய அரசுக்கு நம் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள்

1.) GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.

2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST யாக இருக்க வேண்டும்.

3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.

4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.

6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை.

மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்

1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1௦௦௦ நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.

3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.

5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.

7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

8.) இந்த துறையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.

More News

வறுமையில் வாடும் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தாணு நிதியுதவி

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர், 'அடைந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி' என்ற வசனத்தின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.

ராகவா லாரன்ஸ் மிஸ் செய்ததை சமுத்திரக்கனி செய்வாரா?

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

சசிகலா குடும்பம் வெளியேறிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன் - தம்பிகள். கே.பி முனுசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக தலைவர்கள் அனைவருமே சசிகலாவின் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர்

'தளபதி 61' படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த ஜோதிகா

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் மூன்று நாயகிகள் என்று முடிவு செய்த பின்னர் அவர்கள் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என்று தான் முதலில் உறுதி செய்யப்பட்டது.

பாகுபலி 2: ஒரு முன்னோட்டம். இந்தியாவின் பிரமாண்டமான படத்தை உற்சாகமாக வரவேற்போம்

உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவின் தரத்தைப் பறைசாற்றி இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த படம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’. இந்தப் பிம்மாண்ட வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' இந்த வாரம் வெளியாகிறது.. ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட், அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஆகியோர்கள் படங்கள் ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூல் செய்&#