close
Choose your channels

திரைப்படம் மூலம் விடுத்த கோரிக்கை: முதல்வரின் உத்தரவால் சமுத்திரகனி மகிழ்ச்சி!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படம் மூலம் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் பிராங்க்ளின் ஜேகப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரைட்டர்’. இந்த படத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே ஒரு இணைப்பு பாலம் வேண்டுமென்றும் அதற்கு அரசு முயற்சி செய்யவேண்டும் என்ற வகையில் கருத்துக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில் ஓய்வு பெற்ற நீதிபதி சிடி செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையத்தின் பணி என்னவெனில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே உறவை மேம்படுத்துவதும் காவல் பணியாளர் நலத் திட்டங்களை செயல்படுத்துவது என முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து ‘ரைட்டர்’ படத்தில் விடுத்த கோரிக்கை நிறைவேறியதாக சமுத்திரகனி தனது சமூக வலைத்தளத்தில் முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.