மும்பையில் இருந்து கிளம்பினார் ஆளுனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வருடன் சந்திப்பா?

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு சற்று முன்னர் கிளம்பினார். அவர் இன்று பிற்பகல் 3மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் என்ற முறையில் சென்னை விமான நிலையத்தில் கவர்னரை வரவேற்க ஓபிஎஸ் செல்லவுள்ளதாகவும், விமான நிலையத்திலேயே அவர் கவர்னருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஆளுனர் சென்னை வந்தவுடன் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா அவரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இறுதிமுடிவு எடுக்கும் பொறுப்பு கவர்னரின் கையில் உள்ளதால் இன்னும் ஒருசில மணி நேரங்களில் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை எட்டும் என்று கூறப்படுகிறது.

More News

ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்...

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளி. இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வகையில் உடனடியாக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ், தமிழகம் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளி செய்து வருகின்றனர்...

முதல்வர் கடிதம் கிடைத்ததும் வங்கி கணக்கு முடக்கப்படும். பேங்க் ஆப் இந்தியா மேலாளர் அதிரடி

அதிமுக பொருளாளராக இருக்கும் தன்னை நீக்க தற்காலிக பொதுசெயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் இன்னும் பொருளாளராகவே தொடர்வதால் தன்னுடைய அனுமதியின்றி ஒரு ரூபாய் அதிமுக வங்கிக்கணக்கில் பணம் எடுக்க அனுமதிக்ககூடாது என்றும் அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வங்கி அதிகாரிக்க்கு கடிதம் எழுதியிருந்தார

கனடாவுக்கு வாருங்கள். டொரண்டோ மேயர் அழைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கனடா தலைநகர் டொரண்டோ சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டொரண்டோ மேயர் ஜான் டிராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...

முதல்வர் ஓபிஸ்-ஐ சந்தித்த தலைமைச்செயலாளர்-டிஜிபி. திடீர் திருப்பம் ஏற்படுமா?

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சற்று முன்னர் தமிழக தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது...