close
Choose your channels

சற்றுமுன் வந்த தகவல்: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா

Friday, March 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் ஏற்கனவே 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வந்த தகவலின் படி தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 73 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளதை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

மூவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.