காலரா நோயை வென்ற தமிழகம்… சீரிய நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு குவியும் பாராட்டு!!!

 

காலரா நோய் பாதிப்பால் தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற தகவலை தமிழகச் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. இதனால் காலாரா நோய்க்கு எதிரான பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு கழிவுநீர் மேலாண்மையை மிக நேர்த்தியான முறையில் கையாளுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளினால் காலரா போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு சிறப்பான கழிவுநீர் பராமரிப்பு, பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் காலாரா உயிரிழப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதில் 2012-2019 வரை என கடந்த 9 ஆண்டுகளாக வெறுமனே 710 பேர் மட்டுமே காலாரா நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 89 பேருக்கு காலாரா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து இருந்ததையும் தமிழகச் சுகாதாரத்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. திமுக ஆட்சி காலமான கடந்த 2007-2011 ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3544 ஆக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 709 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆனால் தற்போதைய ஆளும் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் காலரா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அதுவும் கடந்த 2017 இல் இருந்து தமிழகத்தில் ஒருவர் கூட இந்நோய் பாதிப்பால் தாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் கொடிய நோய் பாதிப்பில் இருந்து வெற்றிப்பெற்றுள்ளது.

More News

பீகார் சட்டமன்றத் தேர்தல்…  ஆட்சி கட்டிலில் ஏறப்போவது யார்???

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது

காவிரி ஆற்றில் போட்டோஷூட்: திருமண நிச்சயம் செய்யப்பட்ட ஜோடி பரிதாப பலி!

காவிரியாற்றில் நடத்தப்பட்ட போட்டோசூட் ஒன்றில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் ஜோடி பரிதாபமாக ஆற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பாலா-ஷிவானியை அடுத்து மேலும் ஒரு காதல் ஜோடி: கோர்த்துவிட்ட பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த ரொமான்ஸ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை தான்

தலையில் பாட்டிலை உடைத்து நாமினேஷன்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் நாமினேஷன் இல்லை என்பதும் தெரிந்ததே

தீபாவளி வரை இலவச சினிமா: தியேட்டர் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.