தமிழக உளவுத்துறை தலைவர் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே விடுப்பில் சென்றுள்ள சத்தியமூர்த்திக்கு பதிலாக புதிய உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் நாளை முக்கிய திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென உளவுத்துறை தலைவர் மாற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

More News

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி?

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் எப்போது தீர்வு சொல்வார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பத்திற்கு விடை நாளை சுப்ரீம் கோர்ட் மூலம் கிடைத்துவிடும் என தெரிகிறது...

கூவத்தூரில் தங்குகிறார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் சென்னை வருவது எப்போது?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்களை கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளார். நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரண்டு நாட்கள் கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த சசிகலா, இன்று மீண்டும் மூன்றாவது நாளாக அங்கு செல்கிறார்...

ஈசிஆரில் இளையதளபதி விஜய் மற்றும் நித்யாமேனன்

தமிழக அரசியல் களமே ஈசிஆரில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டை வட்டமடித்து வரும் நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பும் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு பகுதியில் நடைபெற்று வருகிறது.

சச்சின் - ரஹ்மான் இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேரிகோம், தோனி போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்பேன் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமும் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது.

நாங்கள் 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள். சசிகலா ஆவேச பேச்சு

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்பதில் குழப்ப நிலை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது. எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்துள்ள சசிகலாவை கவர்னர் இதுவரை அழைக்கவில்லை. மிரட்டி ராஜினாமா செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தும் ஓபிஎஸ் அவர்களுக்கும் கவர்னர் எந்தவித பதிலை கூறாமல் அமைதி காத்து வருகிறார்.