கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்தில் பதவியை பெற்ற தினகரன். என்ன நடக்கிறது அதிமுகவில்?

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

ஜெயலலிதாவால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் சற்று முன்னர் அதிமுகவில் இணைத்து கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். அதுமட்டுமின்றி கட்சியில் இணைந்த ஒரு சில மணி நேரத்தில் டிடிவி தினகரனுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று சிறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்சியின் முழு கட்டுப்பாடும் துணைச்செயலாளர் கைக்கே வந்துவிடும் என்பதால் டிடிவி தினகரன் கையில் கட்சியை ஓப்படைக்கவே அவர் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை அதிமுகவில் இல்லாத துணைப்பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதில் தனது சகோதரி மகனையே உட்கார வைத்துள்ள சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள். இஸ்ரோவின் உலக சாதனை.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இணைத்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது

ஜெ. நீக்கிய இருவர் மீண்டும் அதிமுகவில். சிறைக்கு செல்லும் முன் சசிகலா அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தண்டனையை உறுதி செய்த நிலையில் இன்று அவர் பெங்களூரில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மீண்டும் நடிப்பில் முழுகவனம் செலுத்தும் பிந்துமாதவி

கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்த நடிகை பிந்துமாதவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர்-தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்படவும் செய்தது...

அடுத்த கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'அறம்'

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் 'அறம்'

ஜெயம் ரவி: முடிந்தது 'வனமகன்', மீண்டும் தொடங்கியது 'டிக் டிக் டிக்'

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போகன்' நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் திருப்திகரமாக அமைந்த படமாக இருந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.