சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் எவ்வளவு?

சென்னையில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இன்று கொரோனா பாதிப்பு சென்னையில் புதிய உச்சமாகி உள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது

இன்று தமிழகத்தில் 1,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,384 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1072 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,693ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,901என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 16,447 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 544,981 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது