கொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம்!!! சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு!!! தமிழக அரசின் அதிரடி!!!

 

கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதுவரை தமிழகத்தில் 31 லட்சத்து 55 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் அளித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து அதிக சோதனை மேற்கொள்ளும் மாநிலமாக முன்னிலை வகிக்கிறது.

நேற்றைய நிலைமையை பொறுத்த அளவில் இதுவரை ஒட்டுமொத்த தமிழகத்தில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்து இருக்கிறது. ஆனாலும் குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 2,38,638 ஆக உயர்ந்து இதிலும் தமிழகம் முன்னிலை பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,927 ஆக இருந்து வருகிறது. தற்போது 53,336 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

இந்த எண்ணிக்கையில் சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா எண்ணிக்கையில் கடும் மாற்றம் அடைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறது. கடந்த ஜுலை மாதங்களில் 2000க்கும் அதிகமாக இருந்த கொரோனா எண்ணிக்கை அடுத்து 1500 ஆக குறைந்த பின்பு, ஆகஸ்ட்டின் முதல் வாரத்தில் 1000 ஆக குறைந்து, தற்போது 1000க்குக் கீழ் வந்திருக்கிறது. இதனால் சென்னை மிக விரைவில் இயல்பு நிலைமைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,023 ஆகவும் அகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 984 ஆகவும் காணப்பட்டது. இதுதான் சென்னையில் முதல் 1000 க்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. அடுத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாதிப்பு எண்ணிககை 986 ஆகவும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாதிபபு எண்ணிக்கை 989 ஆகவும் பதிவாகி இருக்கிறது. சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக குறைவான எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்று பதிவாகி வருவதால் சென்னை மக்களிடையே புது புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

More News

முதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாய்ஸ். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க இளமை பொங்கி வழியும் என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய

செல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 

கரூர் அருகே சார்ஜில் இருந்த செல்போன் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்

ஒரே வீட்டில் 3 பெண்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு குறைந்தது 4-5 நாட்களில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

பாறைமீது மோதிய சரக்கு கப்பல்!!! 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு!!!

கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரிஷீயஸ் கடல் பகுதியில் 3,800 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அங்குள்ள பாறை