வானிலை மட்டுமல்ல, இதிலும் நான் எக்ஸ்பர்ட் தான்: தமிழ்நாடு வெதர்மேனின் சரியான கணிப்பு!

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

துல்லியமான கணிப்பு: மற்றொரு துறையிலும் காலடி எடுத்து வைத்த தமிழ்நாடு வெதர்மேன்!வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள் தான். அந்த அளவிற்கு அவர் மழை, புயல், வெள்ளம் குறித்த துல்லியமான தகவல்களை பல வருடங்களாக அளித்துக் கொண்டிருந்தார்

இந்த நிலையில் ரமணனின் ஓய்வுக்கு பின்னர் வானிலை அறிக்கையில் புகழ்பெற்றவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் வானிலை அறிவிப்பில் மிகச் சிறப்பாக செய்துவரும் இவர் கிட்டத்தட்ட அனைத்து தகவல்களையும் ரேடார் மூலம் கண்டறிந்து துல்லியமாக மக்களுக்கு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கன மழை மற்றும் வெள்ளம் நேரங்களில் இவர் தரும் தகவல்கள் ஒவ்வொன்றும் பயனுள்ளவை என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வானிலையை அடுத்து தற்போது கிரிக்கெட்டிலும் களமிறங்கியுள்ளார் பிரதீப் ஜான். தனது சமூக வலைத்தளத்தில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி குறித்து அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். கடந்த போட்டியில் இந்தியா படு மோசமாக தோல்வி அடைந்தபோது அடுத்த போட்டியில் இந்தியா பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக பிரதீப் ஷாவுக்கு பதிலாக சுபம் கில்லை களமிறக்க வேண்டும் என்றும் கோஹ்லி விடுமுறையில் செல்ல இருப்பதால் அவருக்கு பதிலாக ராகுல் அல்லது ரோகித் சர்மா களமிறங்க வேண்டும் என்றும், ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கண்டிப்பாக அணிக்கு வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார்

அவர் கூறியது போலவே கிட்டத்தட்ட இன்றைய இந்திய அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வானிலையை அடுத்து கிரிக்கெட் என்ற இன்னொரு துறையிலும் பிரதீப் ஜான் காலடி வைத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது மட்டுமின்றி அவர் தனது ஒவ்வொரு டுவீட்டிலும் அசத்தலாக இந்திய ஆஸ்திரேலிய போட்டி குறித்து சுவராசியமாக கூறி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விமர்சன விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நேற்று நிழலின் கருமையில், இன்று தேவதை வெள்ளையில்.. கலக்கும் ஜூலியின் போட்டோஷூட்

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களின் ஒருவரான ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஏற்கனவே பெற்றிருந்த புகழை இழந்தாலும் அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு

ஒரு விதை போதும், என்னால புது உலகத்தை உருவாக்க முடியும்: ஜெயம் ரவியின் 'பூமி' டிரைலர்

ஜெயம் ரவி, நிதிஅகர்வால் நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகிய 'பூமி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர்: வைரல் புகைப்படம்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில்

சென்னை திரும்புவது குறித்து ரஜினி கூறியது என்ன? தொலைபேசியில் பேசிய முக அழகிரி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

மூணு வாரம் தான் இருக்குது: இன்னும் உணர மாட்டேங்குறாங்க: கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்று 83வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் 17 நாட்களில் முடிவடைய போகிறது