தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,June 10 2017]

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில மாதங்களாக கொளுத்தி வந்த நிலையில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள தெற்கு ஒடிசா கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

முதல்வர் சந்திப்பு எதிரொலி: அய்யாக்கண்ணுவின் சென்னை போராட்டம் வாபஸ்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முதல் சென்னையிலும் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கியது.

பிலிம்பேர் விருது : 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கபாலி-தெறி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு படங்களும் பிலிம்பேர் சவுத் விருதுகளுக்கு 8 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

கார்த்தியின் அடுத்தடுத்த 3 படங்களின் திட்டங்கள்

பிரபல நடிகர் கார்த்தி தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாகும் ஜெய் நாயகி

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நாயகன் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமகியுள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.

சுசீந்திரனுடன் மீண்டும் இணையும் கார்த்தி

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை கார்த்தியின் சகோதரர் சுர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சுசிந்திரனுடனும் அவர் இணையவுள்ளார்.