ஃபனி புயலால் சென்னைக்கு ஏற்பட்ட பிரச்சனை: தமிழ்நாடு வெதர்மேன்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாகவும் ஃபனி புயலாகவும் மாறிய நிலையில் இந்த புயல் தற்போது வங்கதேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. வரும் 3ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த புயலால் வடகிழக்கு மாநிலங்களில் வறட்சியான தட்பவெப்ப நிலை் இந்த வார இறுதியில் நிகழும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இந்த வாரம் அதிக வெப்பத்துடன் இருக்கும். வடமேற்கு காற்று காரணமாக ராயல்சீமா பகுதியில் கடுமையான வெப்பம் நிலவும்.

மேலும் நீலகிரி மற்றும் உள்புற மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரளவு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவிலும் ஓரளவுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் ஃபனி புயலால் அதிக வெப்பம் ஏற்படும் என்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிகம் வெப்பம் நிலவும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது
 

More News

மீண்டும் போலீஸ் கேரக்டரில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா நடிப்பில்  சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்

சாமியார் ஆசாராம் பாபுவை அடுத்து அவரது மகனுக்கும் ஆயுள் தண்டனை!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மற்றும் மகன் நாராயணன் சாய் ஆகியோர்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு

அதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்?

நேற்று பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 56 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக அடித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர்.

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியின் முதல் அதிரடி உத்தரவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது.

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் அதர்வா, ஜீவா படங்கள்

தமிழ் திரையுலகின் இரண்டு இளையதலைமுறை நடிகர்களான அதர்வா மற்றும் ஜீவா ஆகியோர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது