சென்னையில் தோன்றிய சிகப்பு தக்காளி: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கனமழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் தொடங்கிய அடுத்த நாளே சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அண்ணா சதுக்கம் சாலையிலும் மெரீனா கடற்கரையிலும் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கின்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சென்னை மழை குறித்த சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார். சென்னையின் மீது எவ்வாறு மேக மூட்டம் இருந்தது என்பது குறித்து ஒரு செயற்கைக்கோள் படத்தையும் அவர் அதில் வெளியிட்டுள்ளார்.

அண்ணாநகர் பகுதியின் மேல் பரப்பில் சிவப்பு வண்ணத்தில் மேகங்கள் காணப்படுகிறது. இதை சிகப்பு தக்காளி என்று அவர் வர்ணிப்பது வழக்கம். இதுபோன்ற சிகப்பு தக்காளி கனமழையை குறிக்கும் என்றும் அதனால் தான் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக மயிலாப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது போல் மழை பெய்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையின் பல பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்து செஞ்சுரி அடித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கடைசியில ரம்யா பாண்டியனையும் அழவைச்சிட்டாங்களே பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்று பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர்

ரஜினி அரசியலுக்கு வரவில்லையா? வைரலாகும் கடிதத்தால் பரபரப்பு

ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் உறுதியாக அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆன்மிக அரசியலை தொடங்க இருப்பதாகவும்

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா???

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது? முதலமைச்சர் விளக்கம் 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்! அதிர்ச்சி தகவல்

உக்ரைன் நாட்டில் சுறா மீன் தாக்கியதால் 12 வயது சிறுவன் கையை இழந்ததாகவும், கைடு ஒருவருக்கு கால் சேதமடைந்ததாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது