சென்னை மழை முடிவுக்கு வந்துவிட்டதா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களில் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது என்பதும் இன்று காலையும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் டிசம்பர் 1 வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் ஆனால் மோசமான மழை சென்னைக்கு முடிந்துவிட்டது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்னை மக்கள் சற்று நிம்மதியாக அன்றாட வேலையை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும் அரபிக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் காரணத்தினால் கேரளாவிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவாக மாறி புயலாக மாறினாலும் ஆந்திராவை நோக்கி தான் செல்லும் என்றும் அதனால் தமிழகத்தில் கனமழை குறைவு என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் புயல் குறித்து தெளிவான தகவல்கள் கிடைத்த பின் மீண்டும் அப்டேட் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

More News

இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த தலைவர் பதவியை பறித்த போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 57வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானார் என்ற தகவல் திரையுலகினர்

'மாநாடு' படத்தின் 3 நாட்கள் வசூல்: சுரேஷ் காமாட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி மூலம்

கனமழை எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

ஜப்பானில் 'மாநாடு' கொண்டாட்டம்: வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நிலையில் தற்போது சிம்புவின் 'மாநாடு' படத்தையும் ஜப்பானியர்கள் கொண்டாடி வருவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.