சென்னை மக்களே தயாராகுங்கள்: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

  • IndiaGlitz, [Monday,October 31 2022]

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு அதிகமாக மழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: வரும் நாட்கள் கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை தரும் நாட்களாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் மழை தீவிரம் அடையும். சென்னை எல்லையில் மேகமூட்டம் அதிகம் காணப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழைடுப் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக கடற்கரையில் அதிகமான மேகங்கள் காணப்படுவதால் அவை மெதுவாக நகரும் போதும் நல்ல மழை பெய்யும். எனவே சென்னை மக்கள் கனமழைக்கு தயாராகுங்கள். இன்றும் நாளையும் சென்னையில் மிக கனமழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும். அதேபோல் நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன்னியாகுமரியிலும் இன்றும் நாளையும் ஓரளவு மழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளில் நாளை நல்ல மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் சிறந்த கட்டமாக இருக்கும். எனவே சென்னை மக்களே மழையை சந்திக்க தயாராகுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

More News

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 5 பேர்: அதில் இவரும் ஒருவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 21 நாள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 22

அஜித்தின் 'துணிவு' படம் குறித்து மாஸ் தகவலை சொன்ன மஞ்சுவாரியர்!

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

கதறியழுத நிவாஷினியை ஒரே வார்த்தையில் சிரிக்க வைத்த அசல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அசல் கோலார் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அசல் வெளியேறும்போது நிவாஷினி கதறி

சமந்தா குணமாக நாகசைதன்யா வீட்டில் இருந்து வந்த வாழ்த்து!

 பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவித்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'அசல் இருப்பாரு, இருக்கணும்': நிவாஷினி பேச்சுக்கு கமல் கூறிய பதிலடி!

'அசல் இருப்பாரு, இருக்கணும்' என நிவாஷினி கூறியதற்கு கமல்ஹாசன் கூறிய பதிலடி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.