சென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

அக்னி நட்சத்திரம் கடந்த போதிலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சென்னையை நோக்கி சிவப்பு தக்காளி நகர்ந்து வருவதாகவும் இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்

அவர் கூறியதை போலவே தற்போது சென்னையில் பல பகுதிகளில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் உள்ளது என்பதும் மிக விரைவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்தால் மட்டுமே சென்னை குளிர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனா நேரத்தில் தலைத்தூக்கும் போபால் அணுவுலை வெடிப்பு விவகாரம்!!!

போபால் தலைநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அணுவுலை வெடிப்பினால் அந்நகரம் முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு

கொரோனா வைரஸ் ஆற்றல் இழந்து வருகிறது!!! மகிழ்ச்சித் தெரிவித்த இத்தாலி விஞ்ஞானிகள்!!!

இத்தாலி, கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும் தற்போது கொரோனா உயிரிழப்புகள் அந்நாட்டில் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

'கண்ணான கண்ணே, நீ கலங்காதே'! விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை

திருமணம் முடிந்தவுடன் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் கொடுத்த பரிசு: கிராம மக்கள் நெகிழ்ச்சி

பொதுவாக திருமணம் செய்யும் புதுமண தம்பதிகளுக்கு திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகள் கொடுப்பார்கள். ஆனால் கோவை அருகே இன்று நடந்த திருமணத்தில்,