டெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் இதனால் வரும் கோடையில் சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்பது இருக்காது என்பதும் தெரிந்ததே.

இருப்பினும் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுத்தமாக மழை பெய்யவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் டெல்டா விவசாயிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.

தற்போது தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் வலுப்பெற்று தென்மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும் என்றும் கணித்துள்ளார். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, மதுரை, தஞ்சை, திருச்சி, புதுகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

மேலும் தென் மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 தேதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதை அடுத்து தமிழகத்தில் டிச.31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என  தமிழக அரசு அறிவித்துள்ளது

முக்கிய அரசியல் கட்சியில் இணையும் 'இந்தியன்' பட நடிகை!

தேர்தல் நெருங்கும் வேளையில் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியில் இணைவது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் கூட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்

இந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள்  

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்: கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சம்யுக்தா வெளியேறிய நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

என் பள்ளித்தோழி எனக்கே சித்தியா? தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்!

மகனின் பள்ளி தோழியை அவரது தந்தையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த மகன் செய்த வெறிச்செயல் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது