உதயநிதிக்கு நன்றி தெரிவித்த ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள்‌ கூட்டுக்குழு

  • IndiaGlitz, [Friday,September 24 2021]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை ஒன்று இணைந்து கூட்டாக ஒரு குழு அமைத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்தது.

அந்தக் கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக முதல்வருக்கும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதிக்கும் கூட்டுக் குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழத்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளகள்‌ நலன்‌ கருதி தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌, தமிழ்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌ இணைந்து “ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள்‌ கூட்டுக்குழு கடந்த 17ஆம் தேதி அன்று கலந்தாய்வு கூட்டம்‌ நடத்தியது. அதில்‌, பல முக்கிய தீர்மானங்கள்‌ எடுக்கப்பட்டது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்கள்‌, திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபபாத வண்ணம்‌, கோவை மாநகரில்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மூடி இருக்கும்‌ திரையரங்குகள்‌ திறக்க வேண்டும்‌ என்று மாண்புமிகு தமிழக முதல்‌வர் அவர்களிடத்தில்‌ ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள்‌ கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எங்களது. கோரிக்கையை கனிவுடன்‌ ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது. கோவை மாநகரில்‌ உள்ள கட்டுபாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில்‌ திரையரங்குகளை திறந்துகொள்ளலாம்‌ என்ற அரசாணை வெளியிட்டுருப்பது தமிழ்த்‌ திரையுலகினருக்கு பெரும்‌ மகிழ்ச்சியை ஏறபடுததியுள்ளது.

அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களுக்கும்‌, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினரும்‌, சேப்பாக்கம்‌ திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின்‌ அவர்களுக்கும்‌, அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும்‌, தமிழ்த்‌ திரையுலகினரின்‌ சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

More News

திருச்சி- 22 மாதக் குழந்தை சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விந்தை!

2021 ஆம் ஆண்டிற்கான இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் திருச்சியை சேர்ந்த 22 மாதமே ஆன குழந்தை சாய் தருண் இடம்பிடித்துள்ளார்.

யோகிபாபுவுக்கு நன்றி கூறிய விவேக் மகள்!

சமீபத்தில் நடிகர் விவேக் எதிர்பாராத மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் தற்போது அவரது மகள் நடிகர் யோகிபாபுவுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

சாதனை பெண் மாரல் யாஜர்லு உடன் மீண்டும் அஜித் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகை பைக்கில் சுற்றி வந்த இளம்பெண் மாரல் யாஜர்லு என்பவரை சந்தித்தார் என்பதும், அதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

நடிகை மீனா பிறந்தநாள் பார்ட்டியில் குவிந்த பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை மீனா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிளாமர் உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் ஷாலினி பாண்டே... வைரல் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.