டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை. அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,March 13 2017]

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜே.என்.யூ பல்கலையில் எம்.பில் படித்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் சற்று முன்னர் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் என்ற மாணவரின் தற்கொலை மரணத்திற்கு நீதிகேட்டு போராடிவரும் மாணவர் குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன் தலித் பிரச்சனைகளுக்காக முன் நிற்பவர் என்றும் அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் புத்திசாலி மாணவர்களில் ஒருவர் என்றும் ஜே.என்.யூ பல்கலையை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்

மேலும் முத்துக்கிருஷ்ணனின் சமூக வலைத்தள பக்கத்தில் எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக பதிவுகள் செய்துள்ளார். எனவே அவருக்கு கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவர் முத்துகிருஷ்ணனின் தற்கொலை சக மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'2.0 சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.

இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த முதல்வரை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட கவர்னர்

பிரபல சமூக சேவகியும், மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருமான இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தவர் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு&#

கமல் பேட்டிக்கு வைகைசெல்வன் எதிர்ப்பு, நாஞ்சில் சம்பத் ஆதரவு.. என்ன நடக்குது சசிகலா அணியில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மக்கள் யாருக்காக வாக்கு அளித்தார்களோ அவர் இன்று இல்லை என்பதால் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சசிகலா ஆதரவாளரும், தமிழக அமைச்சருமா&#

ராகவா லாரன்ஸ், தனுஷூடன் இணைந்த ஆர்யா

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான ஆர்யா நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிக்கனியை பறிக்காத நிலையில் அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் 'கடம்பன்'.

கமல் ஹாசனின் கனவு பலிக்காது: அமைச்சர் வைகை செல்வன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் வேறொரு தலைமைக்காகத்தான் வாக்களித்தார்கள்