ஒரே நாளில் முடிவு செய்து அவசர அவசரமாக நடந்த கல்யாணம்: பிரபல சீரியல் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,August 03 2022]

தனது திருமணம் ஒரே நாளில் திட்டமிட்டு அவசர அவசரமாக நடந்ததாகவும், பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை என்றும் வீடியோ ஒன்றில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ டிவியில் ஒளிபரப்பான ’யாரடி நீ மோகினி’ என்ற தொலைக்காட்சி தொடரில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் நட்சத்திரா. இவர் தற்போது ’வள்ளி திருமணம்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும், சீரியலில் பணிபுரியும் விஸ்வா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென நட்சத்திரா தனது காதலர் விஷ்வாவை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து நட்சத்திரா வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

தான் தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்து வருவதாகவும் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டதால் ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், எனக்கு பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நெருங்கிய நண்பர்களை கூட கூப்பிட முடியவில்லை என்றும் கூறினார். விஷ்வா - நட்சத்திரா திருமணம் குலதெய்வம் கோயிலில் குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் நடந்தது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சிலர் விஷ்வாவின் கட்டுப்பாட்டில் நட்சத்திரா இருப்பதாகவும், நட்சத்திராவை மிரட்டி விஸ்வா திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி வரும் நிலையில் நட்சத்திரா அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

தனுஷ் வேற லெவல் நடிகர்: 41 வயது சீனியர் நடிகை பாராட்டு!

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என்பது தெரிந்ததே.

முடியாத 'எஞ்சாய் எஞ்சாமி' பஞ்சாயத்து: அறிவு, சந்தோஷ் நாராயணனை அடுத்து 'தீ' விளக்கம்!

சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு, தீ பாடிய 'எஞ்சாய் எஞ்சாமி'  என்ற தனிப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடல் குறித்த சர்ச்சையும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

'யானை' வெற்றியை அடுத்து அருண்விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா?

 அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் கொண்டாடினார்கள்

நேரடி இந்தி படத்தில் நடிக்கின்றாரா சூர்யா? இயக்குனர் இந்த பிரபலமா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கி வரும் 'வணங்கான்' என்ற படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் வரிசையாக பல பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளதாக

'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த சர்வதேச பிரபலம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன்