close
Choose your channels

திருமணமான சில மாதங்களில் கர்ப்பம்.. சீரியல் நடிகையின் சந்தோஷமான அறிவிப்பு!

Sunday, January 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமான ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக தமிழ் சீரியல் நடிகை ஒருவர் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ’யாரடி நீ மோகினி’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பெறுத்தவர் நடிகை நக்‌ஷத்திரா. இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’வள்ளி திருமணம்’ என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் கதைப்படி இந்த சீரியலில் நக்‌ஷத்திராவுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் மட்டுமின்றி உண்மையாகவே நக்‌ஷத்திராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. நக்‌ஷத்திராவை திருமணம் செய்தவர் விஷ்வா என்பதும் சென்னையில் டாட்டு கடை வைத்திருக்கும் இவர் ஜீ தமிழ் சேனலின் சில சீரியல்களில் தயாரிப்பு நிர்வாக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் குடும்ப நண்பர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் திருமணமான நக்‌ஷத்திரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.