எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவு. கமல் உள்பட பிரபலங்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Friday,March 24 2017]

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் அசோகமித்ரனின் மறைவு தமிழ் எழுத்துலகம் மட்டுமின்றி திரையுலகத்தையும் அதிர்ச்சி அளித்துள்ளது. கமல்ஹாசன் உள்பட பல திரையுலகினர்களும் அசோகமித்ரனின் எழுத்துக்கு வாசககர்களாக இருந்தனர்.

அசோகமித்ரன் மறைவு குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு' என்று குறிப்பிட்டுள்ளார்

பிரபல எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எஸ்.ராமகிருஷ்ணன் தனது இரங்கல் அறிக்கையில் கூறியதாவது: சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய 'கரைந்த நிழல்கள்' நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்தும், அமெரிக்க எழுத்தாளர்கள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் அபாரமானவை. எளிமையும் கலைநேர்த்தியும் மிக்க சிறுகதைகளை எழுதியவர் அசோகமித்ரன். அவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது. தனது கஷ்டங்களை, வேதனைகளைக் கலையாக மாற்றத் தெரிந்த அற்புதமான படைப்பாளி. அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்' என்று கூறியுள்ளார்

பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் அசோகமித்ரன் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது: நவீனத்தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை இப்போது' என்று கூறியுள்ளார்.

அசோகமித்ரன் மறைவு குறித்து பிரபல எழுத்தாளர் கலாப்ரியன் கூறியதாவது: “தமிழின் உன்னத எழுத்தாளர்களில் இன்னொருவர் மறைந்து விட்டார். மிகச் சிறப்பான உரைநடைக்கு சொந்தக்காரர். நேரில் பழகுவதற்கும் அருமையான மனிதர்.புதிய கலைஞர்களை ஊக்கப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் காட்டுபவர். அவர் மறைவு நமக்கு இழப்பு. அவர் நினைவுகள் நம்மை வளப்படுத்தும்.

More News

இந்தியாவில் 6500 திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'அட்ஜெஸ்ட்மெண்ட்' குறித்து நடிகை லேகா வாஷிங்டனின் அனுபவம்

'ஜெயம்கொண்டான்', உன்னாலே உன்னாலே', கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை லேகா வாஷிங்டன். சமீப காலமாக உலவி வரும் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து தனது அனுபவங்களை பிரபல இதழ் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்...

'விவேகம்' படப்பிடிப்பில் காஜல் இணைவது எப்போது?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் உலக தரத்தில் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பின் இரண்டு ஸ்டில்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி உலக அளவில் டிரெண்ட் ஆனது தெரிந்ததே...

வாழைப்பழ வடிவில் கேக். வித்தியாசமாக கொண்டாடப்பட்ட செந்தில் பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து காமெடி செய்து அந்த காமெடி ஒரு தலைமுறைக்கும் மேல் தொடர்ந்து மக்களை சிரிக்க வைத்து கொண்டிருப்பது என்றால் அது கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடிதான். இன்று கூட தொலைக்காட்சியில் இந்த காமெடி ஒளிபரப்பப்பட்டால் குடும்பத்தோடு சிரித்து மகிழ்வது உண

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார். அவருக்கு வயது 85...